Maaveerar ninaivu

RSS Feed - Breaking Tamil News from Tamil Eelam

செவ்வாய், 9 நவம்பர், 2010

கவிதை எழுதலாம் 1

பாடம்1. எழுத்து

நாம் காணவிருப்பது வெண்பாவிற்கான இலக்கணம் என்பதால் நேரடியாக உறுப்பியலுக்குச் செல்வது நன்று. செய்யுள் உறுப்புக்கள் மொத்தம் ஆறுவகைப் படும்.

அவை:-

1-எழுத்து
2-அசை
3- சீர்
4-தளை
5-அடி
6-தொடை என்பவையே அவ்வாறும்.

எழுத்தசை சிர்தளை அடிதொடை ஆறும்
செய்யுள் உருப்பெனச் செப்புவர் புலவர்.

இச் சூத்திரத்தை நன்கு மனனம் செய்யவும்.

எழுத்து.

12 உயிரெழுத்துக்கள் (அ முதல் ஔ வரை)

18 மெய்யெழுத்துக்கள் (க் முதல் ன் வரை)

216 உயிர்மெய்யெழுத்துக்கள் (க முதல் னௌ வரை)

1 ஆய்தம் (ஃ)

ஆக தமிழ் எழுத்துக்கள் 247

உயிரெழுத்துக்களில்-

அ இ உ எ ஒ -இவை ஐந்தும் குறில்
ஆ ஈ ஊ ஏ ஐ ஊ ஔ -இவை ஏழும் நெடில்.

18-மெய்யோடும் 5-உயிர்க்குறிலும் சேர்வதால் 90 உயிர்க்குறில் ஆகும். இத்துடன் 5-உயிரும் சேர்ந்தால் 95உயிர்க்குறில் ஆகும்.

18-மெய்யோடும் 7-உயிர்நேடிலும் சேர்ந்தால் 126உயிர்நேடிலாக மாறும். அத்தோடு 7-உயிர்நேடிலும் சேர்த்தால் 133-உயிர்நெடில் ஆகும்.

மெய்யெழுத்துக்கள் 18-ம் ஆய்தம் ஒன்றும் (19)-ஒற்றுக்கள் ஆகும்.
செய்யுள் இலக்கணத்தில் எழுத்துக்களை குறில் நெடில் ஒற்று எனும் மூன்று வகையாகப் பிரிப்பர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக